கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:41 IST)
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் எல்லைக்கு உட்பட்ட  திருவரங்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில் பணியாற்றும் சோலைராஜ் மற்றும் ஜி ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றுள்ளனர். இது சம்மந்தமாக மது வாங்கிய வாடிக்கையாளர் அரசாங்கம் கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என கூறியிருப்பதை சுட்டிக்காட்டு கேள்வி எழுப்ப மரியாதைக் குறைவாக பேசி கூடுதல் விலைக்கு தான் விற்பேன் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

அதையடுத்து ராமநாதபுர மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கிட்டத்தட்ட எல்லா டாஸ்மாக் கடைகளிலும் இதுபோல அதிக விலைக்கும் பில் இல்லாமலும்தான் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments