Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு – சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர் !

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (08:50 IST)
விரைவில் நடக்க இருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவின் போது தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட இரு மொழிகளிலும் வழிபாடு நடக்கும் என அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சோழப் பேரரசின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்றாக 1000 ஆண்டுகளாக விளங்கி வருகிறது தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலின் குடமுழுக்கு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் குடமுழுக்கின் போது தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டுமென தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது சம்மந்தமாக ஜனவரி 22 ஆம் தேதி தஞ்சாவூரில் தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் சார்பாக மாநாடு நடத்த உள்ளனர். இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட இரு மொழிகளிலும் வழிபாடு செய்யப்படும் என தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

ஒருவருடைய பெர்சனல் டேட்டா வேண்டுமா? வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கும்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments