Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொல்லியல் துறை உத்தரவு எதிரொலி: தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் மூடப்பட்டது

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:35 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவிடங்கள் மற்றும் கோவில்கள் அனைத்தையும் மூட வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவிடங்கள், கோவில்கள் இன்று முதல் மூடப்படுகின்றது
 
தமிழகத்தை பொருத்தவரை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் சிற்பக் கலை கோவில் உள்பட அனைத்து கோவில்கள் மற்றும் நினைவிடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பக்தர்களுக்கு மட்டுமாவது தஞ்சை பெரிய கோயில் திறக்கப்பட வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தொல்லியல் துறை அதற்கு செவி சாய்க்காமல் தஞ்சை பெரிய கோயிலை மூடி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனால் சுற்றுலா துறைக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தஞ்சை பெரிய கோயில் உள்பட ஒரு சில சுற்றுலாத் தளங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments