Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆர் சிலையை பெயர்த்த மர்ம ஆசாமிகள்! – தஞ்சாவூரில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (09:09 IST)
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் சிறிய அளவிலான சிலைகள் முதல் முழு உருவ சிலைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் வடக்குவீதி காளிக்கோவில் பகுதியில் மார்பளவும் எம்ஜிஆர் சிலை ஒன்று நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த சிலையை மர்ம ஆசாமிகள் அடியோடு பெயர்த்து எடுத்து வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்த்துறையினர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததோடு மர்ம ஆசாமிகளையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments