Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.20 லட்சம் இழப்பீடு வேண்டும்: மதுபானத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம்

Webdunia
திங்கள், 22 மே 2023 (10:22 IST)
தஞ்சையில் மதுபானம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ரூபாய் 20 லட்சம் கேட்டு போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தஞ்சாவூரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தற்போது வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
இறந்த உடல்களை அவசர அவசரமாக ஏன் பிரேத பரிசோதனை செய்தார்கள் என்றும் காவல்துறை அவசரம் காட்டுவது ஏன் என்றும் இருவரின் மரணத்திற்கு உரிய காரணம் தெரியாமல் உலலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்கிய நிலையில் தமிழக அரசின் மதுபான கடையில் மது வாங்கி குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஏன் நிவாரணம் அறிவிக்கவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். 
 
தங்கள் உறவினர்களின் மரணத்திற்கு காரணம் தெரிய வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்றும் உயிர் இழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments