Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கு மழையே வராதா? – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:26 IST)
தமிழகத்துக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் மழைப்பொழிவு குறைவாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ காற்றால் வட மேற்கு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் நீராதாரத்திற்கு வடகிழக்கு பருவ மழை முக்கியமான ஒன்று. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வந்தாலும், இன்னும் சராசரி அளவை தொடவில்லை.

எதிர்வரும் மாதங்களில் பருவ மழை தீவிரமடையலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலில் இந்த பருவ மழையின்போது வடமாநிலங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் மழை பொழிந்தாலும் அது சராசரி அளவிற்கு நிகராக இருக்குமா என குறிப்பிட முடியாது என்றும், அதே சமயம் வட கிழக்கு மாநிலங்களான மிசோரம், மேகாலயா, பீகார் பகுதிகளில் அதீத மழை இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments