Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓமனிலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் மாயம்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:07 IST)
ஓமனிலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் திடீரென மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
 
ஓமனில் உள்ள மசீரா தீவில் இருந்து மீன்பிடிக்க 8 மீனவர்கள் 14ம் தேதி சென்றனர். இந்த 8 பேர்களில் ராமநாதபுரம் நம்புதாளையை சேர்ந்தவரகள் 5 பேர்கள், குளச்சல் பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேர்கள் என்றும் தெரிய வந்துள்ளது
 
 
இந்த நிலையில் மீன் பிடிக்க சென்ற 8 பேர்களும் திடீரென மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
 
 
காணாமல் போன 8 மீனவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது அலை அடித்து சென்றதா? என்பது குறித்து மீட்புப்படையினர்களின் தேடுதல் வேட்டைக்கு பின்னரே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments