அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மெல்ல கட்டுப்பாடுகள்?? – கொரோனா நடவடிக்கை!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (10:59 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசு கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக அறிவித்த மாவட்டங்களில் இந்த மூன்று மாவட்டங்களும் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும் “தமிழகத்தில் கடந்த ஆண்டில் கொரோனாவுக்கு தடுப்பூசிகள் இல்லாததால் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அத்தியாவசிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கொரோனா அதிகரித்தால் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments