Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட காலத்திற்கு பின் சுற்றுலா தளங்கள் திறப்பு! – சூடுபிடிக்குமா சுற்றுலா தொழில்?

நீண்ட காலத்திற்கு பின் சுற்றுலா தளங்கள் திறப்பு! – சூடுபிடிக்குமா சுற்றுலா தொழில்?
, திங்கள், 14 டிசம்பர் 2020 (09:21 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தளங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதலாக கடந்த 8 மாதங்களாக சுற்றுலாதளங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று முதல் சுற்றுலா தளங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கன்னியாக்குமரி மற்றும் பல அருவிகள் திறக்கப்பட்டுள்ளன.

மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டங்கள் விடுமுறை காலகட்டங்கள் என்பதால் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சுற்றுலா தளங்களும், அதை நம்பி தொழில் செய்வொர்களும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். எனினும் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததாலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளை கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வருவதாலும் சுற்றுலா தளங்களுக்கு மக்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி க்ளினிக்! – முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்!