Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காத்திருக்குது கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்? – வானிலை ஆய்வு மையம்!

காத்திருக்குது கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்? – வானிலை ஆய்வு மையம்!
, புதன், 19 அக்டோபர் 2022 (08:42 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 22ம் தேதி வரை 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி இன்று, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் பெங்களூரு வெள்ளத்தில் மூழ்குமா? மஞ்சள் அலர்ட் விடுத்ததால் பரபரப்பு!