Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈ, காக்கை கூட இல்லாத சாலைகள்! – தமிழகத்தின் இன்று முழு ஊரடங்கு!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (08:45 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு கடந்த 6ம் தேதி முதலாய் அமலில் இருக்கும் நிலையில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதேபோல இந்த மாதம் முழுவதும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் இன்று முழு ஊரடங்கு காரணமாக திரையரங்குகள், வணிக வளாகங்கள், காய்கறி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை கார்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments