ஜூன் மாதம் ஒத்திவைக்கப்படுகிறதா 12ம் வகுப்பு தேர்வு? – அதிகாரிகள் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:29 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கலாம் என தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments