பெற்றோர்கள் அமோக ஆதரவு; 3வது வாரத்தில் பள்ளி திறக்க வாய்ப்பு?

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (14:39 IST)
கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதால் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பருவ தேர்வுகள் நெருங்கி வருவதால் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்கள் – ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் கல்வி அமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் முதல்வர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுவரையிலான கருத்து கேட்பு கூட்டங்களில் பெற்றோர்கள் பெரும்பான்மையாக பள்ளிகளை திறக்க ஆதரவாக பேசியுள்ளதாகவும், அதனால் இந்த மாதத்தின் 3வது வாரத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments