Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி சென்று தமிழகம் திரும்பியோரை கண்டுபிடிக்க தனிப்படை!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (10:01 IST)
டெல்லி மசூதி கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியோரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லியில் மசூதி கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மசூதி ஒன்றில் கடந்த 13ம் தேதி நடந்த மதகுருமார்கள் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மதகுருக்கள் நாடு முழுவதிலும் இருந்து கலந்துக்கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த கூட்டத்தில் சிலர் கலந்து கொண்ட நிலையில், இதில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மத கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்தும் பலர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு தாங்களாக முன்வர வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் யார் யார் டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments