Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டு போராட்டம் ; பிற மாநிலங்களில் தலையெடுக்கும் கலாச்சார விளையாட்டுகள்

ஜல்லிக்கட்டு போராட்டம் ; பிற மாநிலங்களில் தலையெடுக்கும் கலாச்சார விளையாட்டுகள்
, வியாழன், 26 ஜனவரி 2017 (16:29 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வேண்டி இளைஞர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டிருந்த விளையாட்டுகளும் நடத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட வேண்டும் என சென்னை, மதுரை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இளைஞர்கள், கடந்த 15ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அவர்களோடு பொதுமக்களும் கைகோர்த்தனர். இதனால், தமிழக அரசு வேறு வழியில்லாமல் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தற்போது ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டுள்ளது.
 
இதைக்கண்ட மற்ற மாநிலங்களும் தற்போது நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள தங்கள் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

webdunia

 

 
கர்நாடகாவில் பல வருடங்களாக ‘கம்பாளா’ போட்டி நடைபெற்று வந்தது. எருதுகளை வைத்து நடத்தப்படும் இந்த போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு போல், நாங்களும் கம்பளா போட்டியை நடத்தை அவசர சட்டம் கொண்டு வருவோம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
 
அதேபோல், அசாமில் தடைவிதிக்கப்பட்டுள்ள எருது சண்டை போட்டியை, தடையை மீறி நாளை நடத்துவோம் என சில அமைப்புகள் அறிவித்துள்ளது. 

webdunia

 

 
இதேபோல் மற்ற மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ள, கலாச்சார போட்டிகள் தடையை மீறி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் தமிழகத்தில் நடந்த போராட்டமே எடுத்துக்காட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறுக்கிகளே வயதாகிவிட்டதா? ஏன் குடியரசு தின விழாவிற்கு வரவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!