Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொறுக்கிகளே வயதாகிவிட்டதா? ஏன் குடியரசு தின விழாவிற்கு வரவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!

பொறுக்கிகளே வயதாகிவிட்டதா? ஏன் குடியரசு தின விழாவிற்கு வரவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!

பொறுக்கிகளே வயதாகிவிட்டதா? ஏன் குடியரசு தின விழாவிற்கு வரவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!
, வியாழன், 26 ஜனவரி 2017 (16:04 IST)
தமிழர்களை தொடர்ந்து பொறுக்கிகள் என கூறிவருகிறார் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி. இதனால் தமிழர்கள் மத்தியில் பாஜகவும் சுப்பிரமணியன் சுவாமியும் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர்.


 

 
 
மக்கள் எதிர்க்கிறார்கள் என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவர் தமிழர்களை பொறுக்கிகள் என கூறி வருகிறார். இதனை மத்திய அரசும், பாஜகவும் வேடிக்கை பார்க்கிறது. எந்தவித அறிவுரையும் வழங்குவதில்லை. இதனால் சுப்பிரமணியன் சுவாமியும் தமிழர்களை வாய்க்கு வந்தவாறு வசை பாடுகிறார்.

 
இந்நிலையில் இன்று நடந்த குடியரசுதின விழாவை தமிழக மக்கள் புறக்கணித்தனர். இதனையடுத்து மீண்டும் தமிழர்களை பொறுக்கி என திட்டி வசைபாடியுள்ளார்.
 
தற்போது தனது டுவிட்டரில், ஏன், பொறுக்கிகளே இந்திய குடியரசு தினத்தை துரோகமாக பார்க்கிறீர்கள். உங்களுக்கு வயதாகிவிட்டதா? அதனால் தான் வரவில்லையா என்று ஏளனம் செய்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியரசு தின விழாவில் சசிகலா குடும்பத்திற்கு செக் வைத்த ஓ.பி.எஸ்?