Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பசுமை பண்ணைகளில் குறைந்த விலைக்கு தக்காளி! – படையெடுக்கும் மக்கள்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:56 IST)
தமிழகத்தில் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் அரசு பசுமை பண்ணைகள் வழியாக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை வேகமாக உயர்ந்து கிலோ 150 ரூபாய்க்கு மேலாக விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் தக்காளி வாங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு பசுமை பண்ணைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பசுமை பண்ணைகளில் கிலோ ரூ.79 முதல் ரூ.100க்குள் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நடமாடும் பசுமை பண்ணைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளிகளை மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments