Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு டெண்டர் எடுக்க முன் அனுபவம் தேவையில்லை! – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Advertiesment
அரசு டெண்டர் எடுக்க முன் அனுபவம் தேவையில்லை! – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
, வெள்ளி, 23 ஜூலை 2021 (11:15 IST)
தமிழகத்தில் புதியதாக தொடங்கப்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தளர்வுகள் கொண்ட அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், புதிய நிறுவனங்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக தளர்வுகள் மற்றும் சலுகைகள் கொண்ட அரசாணயை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு டெண்டர்களில் பங்கு கொள்ள சிறு, குறு  நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. ஸ்டார்ட் அப் முகமையில் பதிவு செய்திருந்தாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷா பதவி விலக வேண்டும்; மோடிதான் பொறுப்பு! – ராகுல்காந்தி கண்டனம்!