Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்..? சிறப்பு குழுவை அமைத்த முதல்வர்!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (12:29 IST)
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளில் மக்கள் பலர் பணத்தை இழந்து வருவதும், பலர் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் சரியானதாக இல்லை என மீண்டும் வலுவான சட்டம் அமைக்குமாறு கூறி ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சூதாட்ட செயலிகளை தடை செய்வதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் சூதாட்ட செயலிகளை தடை செய்வதற்கு சரியான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு குழவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments