Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! – எத்தனை நாட்கள் அனுமதி?

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (12:07 IST)
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு ஜூன் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments