Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பல்வேறு போராட்ட வழக்குகள் வாபஸ்! – அரசாணை வெளியீடு!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:21 IST)
தமிழ்நாட்டில் மீத்தேன், எட்டுவழிசாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராடியதற்காக தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் எட்டுவழி சாலை, மீத்தேன், கூடங்குளம் அணு உலை, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்குகளை அரசு வாபஸ் பெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட 5570 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments