Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கைது! – இலங்கை கடற்படை அட்டூழியம்!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கைது! – இலங்கை கடற்படை அட்டூழியம்!
, ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (08:58 IST)
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. சமீப காலமாக அவ்வாறாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் பலர் மாநில அரசின் அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை கைது செய்ததுடன், விசைப்படகு ஒன்றையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வர மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாவுக்கு தடை: அதிரடி அறிவிப்பு