Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உங்க இஷ்டத்துக்கு புரளி பேசக்கூடாது.. அறிவியலை நம்புங்க – மன்சூர் அலிகானுக்கு நீதிபதி அறிவுரை!

உங்க இஷ்டத்துக்கு புரளி பேசக்கூடாது.. அறிவியலை நம்புங்க – மன்சூர் அலிகானுக்கு நீதிபதி அறிவுரை!
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:57 IST)
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் முன்ஜாமீன் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது முன்ஜாமீன் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் ரூ.2 லட்சம் டிடியாக அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி குறித்து புரளி பரப்பக்கூடாது, பதற்ற நிலையை ஏற்படுத்த கூடாது அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என மன்சூர் அலிகானுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொழப்பே சிரிப்பா சிரிக்குது.. அதிகம் சிரிக்காத ஆண்கள்! – ஆய்வில் தகவல்!