Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று தமிழகத்தில் 12வது தடுப்பூசி முகாம்! – 50 ஆயிரம் மையங்களில் ஏற்பாடு!

இன்று தமிழகத்தில் 12வது தடுப்பூசி முகாம்! – 50 ஆயிரம் மையங்களில் ஏற்பாடு!
, ஞாயிறு, 28 நவம்பர் 2021 (08:38 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை குறைக்க தமிழக அரசின் 12வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் 12வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. தமிழக அரசிடம் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள நிலையில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுவரை 77.02 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்கு பிறகு இனி வாரம் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐரோப்பாவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கிழக்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கை!