Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 நாட்களில் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் தமிழகம்!

10 நாட்களில் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் தமிழகம்!
, ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (14:23 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக வயதானவர்கள் மட்டுமே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குழந்தைகளும் கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள நேபாளம் பறக்கும் இந்தியர்கள் - காரணம் என்ன?