Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட குழு… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (15:28 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள 17 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தமிழகத்தில் பாஜக வலுவாக காலூன்றுவதற்காக தீவிரமாக இயங்கி வருகிறார். அதையொட்டி விரைவில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள 17 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இயங்க உள்ள அந்த குழுவில், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுச் செயலாளர்கள் ராகவன், செல்வகுமார், ராமஸ்ரீனிவாசன், நாகராஜன், மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, பொதுக்குழு உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா, செய்தி தொடர்பாளர் நரசிம்மன், சிறப்பு அழைப்பாளர்கள் ராமலிங்கம், கு.க.செல்வம், சம்பத் உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு திமுகவின் மெத்தனபோக்கே காரணம்.! டிடிவி தினகரன் காட்டம்..!

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments