Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்கள் மீது தாக்குதல் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் மீது தாக்குதல் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:02 IST)
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

 
கடந்த பல ஆண்டுகளாக நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதும் படகுகளை தாக்கி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருளுக்கு  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
 
அதில் அவர், இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும் அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகுதிச் சுற்றில் முதலிடம்: தங்கத்தை குறிவைக்கும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி