Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 மாணவிகளுக்கு கொரோனா! – அடுத்தடுத்து அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (12:54 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் மூன்று மாணவிகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதலாக பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரியலூரில் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாணவிகள் கொரோனா பாதிப்புக்குள்ளாவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments