Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையின் வீட்டிற்கு அண்ணாமலை வருகை.. திடீர் சந்திப்பு ஏன்?

Siva
வெள்ளி, 14 ஜூன் 2024 (15:20 IST)
முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் முன்னாள் புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளதாக தகவல் வெளியானது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை அழைத்து அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் ஆந்திராவில் இருந்து சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. 
 
ஆனால் அதே நேரத்தில் அவர் இது குறித்து விளக்கம் அளித்த போது அமித்ஷா தனக்கு சில அறிவுரைகள் கூறியதாகவும் மிரட்டவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழிசையுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
 
முன்னாள் ஆளுநரும், தென் சென்னை பாஜக வேட்பாளராகவும் களமிறங்கிய தமிழிசையுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு நடந்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டிற்கு அண்ணாமலை வருகை தந்ததாகவும் இருவரும் மனம்விட்டு சில நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments