Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாகம் நடத்தியதினால் தான் மழை பெய்தது:தமிழிசை கருத்து

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (15:25 IST)
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், யாகம் நடத்தியதால் தான் மழை பெய்தது என கருத்து தெரிவித்துள்ளார்.

சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தால் அவதிபட்ட மக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை தந்தது.

இதனிடையே தமிழக பா.ஜ.க. கட்சி சார்பாக தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த யாகத்தால் தான் தமிழகத்தில் மழை பெய்தது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது கருத்தை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் பலர் கேலி செய்து வருகின்றனர்.

ஆனாலும், யாகம் செய்வதினால் மழை பெய்யும் எனவும், அதில் ஒரு வேத விஞ்ஞான அறிவியல் உள்ளதென்றும் மத நம்பிக்கையாளர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments