Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார் –தமிழிசை ஆவேசம்.

Advertiesment
ஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார் –தமிழிசை ஆவேசம்.
, சனி, 13 அக்டோபர் 2018 (13:32 IST)
பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சின்மயி-வைரமுத்து விவகாரம் தொடர்பாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் அளித்த அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார் தமிழிசை சவுந்தர்ராஜன். கூட்டத்தில் தீர்ப்புக்கு எதிராக சத்யப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதுமுடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சின்மயி வைரமுத்து விவகாரம் தொடர்பான கேள்விக்கு ‘ஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை அந்த ஆண்டாளே சின்மயி மூலமாக வந்து கிழித்து வருகிறார்.’ எனப் பதிலளித்தார்.

மேலும் இதுகுறித்து கூறுகையில் சின்மயின் புகார்கள் விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டுமெனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்வையற்ற இளம்பெண் கற்பழித்துக் கொலை - வண்டலூரில் அதிர்ச்சி