Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கன் கட்சியுடன் கூட்டணியா? தமிழிசை நக்கல் பதில்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (15:38 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தங்கள் பற்றியும் கூட்டணி பற்றியும் பேசியுள்ளார். இதில் காங்கிரஸ் மற்றும் அமமுகவை விமர்சித்துள்ளார். 
 
தமிழிசை இது குறித்து பேசியது விரிவாக, காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த கட்சி. இப்படி இருக்கையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால், கடந்த் முறை கிடைத்த 40 இடங்களும் கிடைக்காமல் போய்விடும். 
 
காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே மூழ்கும் கப்பலாகத்தான் உள்ளது. அதனால், காங்கிரசுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்கள் மூழ்கித்தான் போவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தாக்கம் இருக்கவே இருக்காது. 
 
பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதம் முன்பிலிருந்தே தயாராகி வருகிறது. அதேபோல், தமிழகத்தில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்கிறார் டிடிவி தினகரன்.
 
நாங்கள் ஊழல்வாதிகளுடனும், 20 ரூபாய் டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என சொன்னோமா? நீங்கள் என்ன எங்களை நிராகரிப்பது? நாங்கள் யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. 22 மாநிலங்களை பாஜக ஆட்சி செய்கிறது. நாங்கள் ஒன்றும் சாதாரண கட்சி அல்ல. தமிழகத்திலும் கணிசமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments