Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது தாமரை கோலத்த அழிச்சுட்டீங்களா..? பொங்கி எழுந்த தமிழிசை!

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (16:38 IST)
தாமரை வடிவில் போடப்பட்ட கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததால் கோபப்பட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வரையப்பட்ட கோலங்களில், தாமரை வடிவத்திலான கோலங்கள் இருந்த்தால் இது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக அந்த கோலங்களை அழித்துள்ளனர். 
 
இதற்கு தமிழிசை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வரையப்பட்ட தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். 
தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். இது தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படி பார்த்தால், கை ஒரு கட்சியின் தேர்தல் சின்னம், அதற்காக கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? 
 
தினமும் சூரியன் உதிக்கின்றது. சூரியனும் ஒரு கட்சியின் தேர்தல் சின்னம். எனவே சூரியனை மறைத்து விடுவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments