கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: தவெகவின் இன்னொரு மாவட்ட செயலாளர் கைது..!

Mahendran
வெள்ளி, 10 அக்டோபர் 2025 (10:06 IST)
கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சில தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சேலம் மாவட்ட கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இவர், கூட்ட நெரிசலின்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து தாக்கியதாகப் பெறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வாகனத்தை வெங்கடேசன் மறித்து தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து, கரூர் நகர காவல் நிலைய போலீசார் இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்கு மட்டும் மெட்ரோ போதும்: கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு..!

தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்: பாகிஸ்தானின் மூன்று FC கமாண்டோக்கள்..!

இந்திய பாஸ்போர்ட் செல்லாது.. சீன பாஸ்போர்ட் வேண்டும்.. அருணாச்சல பிரதேச பெண்ணிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்..!

அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா.. 161 அடி கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!

வங்கக்கடலில் இன்னொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. நாளை உருவாக வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments