தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடக்கிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு தொடங்கவுள்ள இந்த கூட்டத்தில், கட்சி தலைவர் விஜய் தனது வருகையை பதிவு செய்துள்ளார்.
3000 பேர் வரை நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடும் என்று விஜய் முன்பே அறிவித்திருப்பதால், மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து, கழகத்தின் அமைப்பை வலுப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
சமீபத்தில் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா சிறப்பாக நடந்த நிலையில், இன்று நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவரை பிரதிநிதியாக அழைத்துள்ளன.
இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.