Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடமாநிலத்வரால் தமிழக தொழிலாளர்கள் பாதிப்பு- பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம்.

வடமாநிலத்வரால் தமிழக தொழிலாளர்கள் பாதிப்பு- பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம்.
, வியாழன், 23 மார்ச் 2023 (11:00 IST)
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு பெருமளவு வருகை புரிவதால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், வட மாநில தொழிலாளர்கள் தமிழ் மக்கள் ஒப்பந்தம் செய்யும் தொகையினை விட குறைவான தொகைக்கு வேலை செய்வதால் தமிழர்களின் வேலை பாதிக்கப்படுவதாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்த்தனர்.  
 
மேலும் பல இடங்களில் தங்களது வேலை வாய்ப்பினை பறித்துகொண்டு  வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 
எனவே தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்களுக்கு 90% வேலை வாய்ப்பினை வழங்க சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் இங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். 
 
மேலும் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் குடும்ப அட்டை, ஓட்டுரிமை கொடுக்கக்கூடாது எனவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓ... இதுக்குத்தான் மேம்பால தூண்களில் ஓவியங்களா..? அரசியல் கட்சிகளுக்கும் ஆப்பு!