திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?

Mahendran
செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (17:41 IST)
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தமிழக அரசு திரும்பப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை செய்த நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக அறிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றம் அதில் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டு, "டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமே முடிவு செய்யட்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப்பெற்றது.
 
"டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்" என ஏன் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் ரகுபதி, "உச்சநீதிமன்றத்தில் வேறு மாநிலத்துக்கு மாற்ற மனு தாக்கல் செய்யவில்லை" என்று கூறினார். ஆனால் இன்று அந்த மனுவை திமுக அரசு வாபஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments