Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

Advertiesment
Ragupathi

Prasanth Karthick

, திங்கள், 7 ஏப்ரல் 2025 (18:39 IST)

தமிழக சட்டமன்றத்தில் ’யார் அந்த தியாகி?’ என அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து வந்த நிலையில், அதுகுறித்து திமுக அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை சுட்டிக்காட்டி, 1000 கோடி ஊழல் செய்த அந்த தியாகி யார்? என தொடர்ந்து அதிமுக, திமுகவை விமர்சித்து வருகிறது. இன்று சட்டமன்றத்தில் அந்த வாசகம் அடங்கிய பேட்ஜை அணிந்து அதிமுகவினர் வந்தனர்.

 

இதுகுறித்து பேசியுள்ள திமுக அமைச்சர் ரகுபதி “தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி யார் என கேட்டால் அரசியல் தெரியாத 6ம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கைக்காட்டுவான். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எந்த துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் உதாரணங்கள்தான் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும். 

 

எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் நம்பி மோசம் போன இவர்கள்தான் அந்த தியாகிகள். பாஜகவின் பாதம் தாங்கிய மாறி ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர். 2 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்துவிட்டு இன்று அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் முறை போட்டுப் போய் பார்க்கிறார்கள். அவ்வகையில் பழனிசாமியை நம்பி ஏமாந்த அதிமுகவின் தொண்டர்களுமே தியாகிகள்தான்” என்று கூறியுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!