கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்: 11 புறநகர் ரயில்கள் ரத்து

Mahendran
சனி, 6 செப்டம்பர் 2025 (15:36 IST)
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொன்னேரி யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளை அதாவது செப்டம்பர் 7 அன்று கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பராமரிப்பு பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நடைபெறும்.
 
நாளை ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்கள்:
 
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி (EMU) ரயில்கள்: 42609 (மாலை 6:45), 42611 (இரவு 8:00), 42613 (இரவு 9:20), 42610 (இரவு 9:35), 42640 (இரவு 9:25)
 
மூர் மார்க்கெட் வளாகம் - கும்மிடிப்பூண்டி (EMU) ரயில்கள்: 42029 (இரவு 7:35), 42037 (இரவு 11:20)
 
கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் வளாகம் (EMU) ரயில்கள்: 42038 (இரவு 8:15), 42042 (இரவு 10:30)
 
சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் வளாகம் (EMU) ரயில்: 42422 (இரவு 8:35)
 
கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை (EMU) ரயில்: 42608 (இரவு 7:35)
 
ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் மீஞ்சூர் இடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 
சென்னை சென்ட்ரல் - மீஞ்சூர் சிறப்பு ரயில்கள்:
 
பயணிகள் சிறப்பு ரயில் 01: சென்னை கடற்கரை - மீஞ்சூர் (மாலை 6:45)
 
பயணிகள் சிறப்பு ரயில் 02: மூர் மார்க்கெட் வளாகம் - மீஞ்சூர் (மாலை 7:35)
 
பயணிகள் சிறப்பு ரயில் 05: சென்னை கடற்கரை - மீஞ்சூர் (இரவு 9:20)
 
பயணிகள் சிறப்பு ரயில் 06: மூர் மார்க்கெட் வளாகம் - மீஞ்சூர் (இரவு 11:20)
 
பயணிகள் சிறப்பு ரயில் 08: மூர் மார்க்கெட் வளாகம் - மீஞ்சூர் (இரவு 9:35)
 
மீஞ்சூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள்:
 
பயணிகள் சிறப்பு ரயில் 04: மீஞ்சூர் - சென்னை கடற்கரை (இரவு 8:04)
 
பயணிகள் சிறப்பு ரயில் 06: மீஞ்சூர் - மூர் மார்க்கெட் வளாகம் (இரவு 8:20)
 
இந்த மாற்றங்கள் குறித்த முழு விவரங்களையும், தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ரயில்வே நிலையங்களில் தெரிந்து கொள்ளலாம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments