Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழையை எதிர்ப்பார்க்கலாம்?

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழையை எதிர்ப்பார்க்கலாம்?
, செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (14:48 IST)
இன்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 3 தினகங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில், திருச்சி, பெரம்பலூர், மதுரை, சேலம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னையை பொருத்தவரை நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோமாலியா வான் தாக்குதலில் பொதுமக்கள் பலி: மன்னிப்பு கோரிய அமெரிக்க ராணுவம்!