Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!
, வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:01 IST)
இன்றும், நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்.


தமிழகத்தில் பல பகுதிகளில் 5 நாட்கள் கனமழை பெய்யும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வெள்ளி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தினங்களும் தமிழ்நாடு, புதுவையில் பரவலான பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்றும், நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என  தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கை,கால்களை உடைத்துவிடுவதாக ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு!