இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் மழை - வானிலை மையம் தகவல்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (12:55 IST)
இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல். 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் முன்னறிவிப்பின்றி கடும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
வானிலை மையம் இது குறித்து விரிவாக தெரிவித்துள்ளதாவது, ஜனவரி 8 ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில் ஜனவரி 9 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதால் தென்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments