Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 நாட்களுக்கு எங்கெங்கு மழை... வெதர் அப்டேட்!!

அடுத்த 3 நாட்களுக்கு எங்கெங்கு மழை... வெதர் அப்டேட்!!
, திங்கள், 28 டிசம்பர் 2020 (10:41 IST)
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு எங்கெங்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல், 29 (நாளை), 30 (நாளை மறுதினம்) ஆம் தேதிகளில் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் 31 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊழல் மலை மீது அமர்ந்திருக்கும் ஈபிஎஸுக்கு... துரைமுருகன் வார்னிங்!!!