Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13 ஆம் தேதி வரை தொடர் கனமழை - எச்சரிக்கும் வானிலை மையம்

13 ஆம் தேதி வரை தொடர் கனமழை - எச்சரிக்கும் வானிலை மையம்
, திங்கள், 11 அக்டோபர் 2021 (10:21 IST)
தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு தமிழகத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி வரை தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி மேல் சந்தேகம்… குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொன்ற கொடூர கணவன்!