Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்று ஒரே நாளில் 22.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தமிழகம் சாதனை

நேற்று ஒரே நாளில் 22.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தமிழகம் சாதனை
, திங்கள், 11 அக்டோபர் 2021 (07:25 IST)
கொரனோ வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசு அறிவித்து வருகிறது என்பதும் தமிழகத்தில் கடந்த ஐந்து வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது சிறப்பு தடுப்பூசி முகாம் 22.52 லட்சம் பேர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களில் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பாக முதலாவது மற்றும் இரண்டாவது சிறப்பு முகாமில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் நேற்று 5-வது தடுப்பு சிறப்பு முகாமில்
 22 லட்சத்திற்கும் அதிகமானோர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் புதிய சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து: அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்!