Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறட்சியை சமாளிக்க 1000 கோடி தேவை:மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (13:44 IST)
தமிழ்நாட்டில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி தேவை என்று மத்திய அரசுக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் பல பள்ளிகளும், கல்லூரிகளும், விடுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் அவர் கல்லணை கால்வாயை நவீனப் படுத்தும் திட்டத்திற்கு போதிய நிதியை ஒதுக்கவேண்டும் என்றும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கும் போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு ரூ.6000 கோடி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments