Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 மாவட்டங்களில் இன்றிரவு இரவு 7 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (17:15 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கோடை காலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்று முன்னர் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது 
 
இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே மேற்கண்ட 16 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments