சென்னையின் பல இடங்களில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (16:30 IST)
சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மதியம் மூன்று மணி அளவில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை அண்ணா சாலை தி.நகர் சைதாப்பேட்டை மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
அதேபோல் நுங்கம்பாக்கத்திலும் கனமழை பெய்து வருவதாகவும் இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையில் இன்று காலையில் லேசான வெயில் அடித்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments