Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: விரைவில் அறிவிப்பு என தகவல்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (08:31 IST)
தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த காலக்கெடு முடிவடைவதால் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments