Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: விரைவில் அறிவிப்பு என தகவல்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (08:31 IST)
தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த காலக்கெடு முடிவடைவதால் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments