தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: விரைவில் அறிவிப்பு என தகவல்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (08:31 IST)
தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த காலக்கெடு முடிவடைவதால் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments