Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 18 தமிழக மீனவர்களை சிறைபிடித்த சிங்கள கடற்படை.. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

Siva
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (09:52 IST)
தமிழக மீனவர்களை சிங்கள கடற்கரையினர் கைது செய்யும் நடவடிக்கை பல ஆண்டுகளாக தொடர்கதை ஆகி வரும் நிலையில், தற்போது மீண்டும் 18 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பயணம் செய்த இரண்டு விசைப்படகுகளையும் சிறை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலம் காலமாக, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக மீனவர் சங்கங்கள் பலமுறை மத்திய மற்றும் மாநில அரசுக்கு வலியுறுத்தி உள்ளன. தமிழக முதல்வர் பலமுறை மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதி உள்ளார்.

இருப்பினும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதை ஆகி வரும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments