Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 18 தமிழக மீனவர்களை சிறைபிடித்த சிங்கள கடற்படை.. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

தமிழக மீனவர்கள்
Siva
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (09:52 IST)
தமிழக மீனவர்களை சிங்கள கடற்கரையினர் கைது செய்யும் நடவடிக்கை பல ஆண்டுகளாக தொடர்கதை ஆகி வரும் நிலையில், தற்போது மீண்டும் 18 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பயணம் செய்த இரண்டு விசைப்படகுகளையும் சிறை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலம் காலமாக, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக மீனவர் சங்கங்கள் பலமுறை மத்திய மற்றும் மாநில அரசுக்கு வலியுறுத்தி உள்ளன. தமிழக முதல்வர் பலமுறை மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதி உள்ளார்.

இருப்பினும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதை ஆகி வரும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments